இந்தியா

வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு! கண்ணாடி சேதம்; பயணிகள் அச்சம்!

தெலங்கானாவில் வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், வந்தே பாரத் ரயிலின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

DIN


தெலங்கானாவில் வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், வந்தே பாரத் ரயிலின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்திலிருந்து விசாகப்பட்டிணம் நோக்கி வந்தே பாரத் ரயில் வெள்ளிக்கிழமை மாலை புறப்பட்டது. சென்றுக்கொண்டிருந்தது. 

மஹெபுபாபாத் அருகே செல்லும்போது மர்ம நபர்கள் ரயிலின் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஒரு பெட்டியின் கண்ணாடி சேதமடைந்தது. 

ரயில் கண்ணாடி உடைக்கப்பட்டது தொடர்பாக அனைத்து விதங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. ரயில் மற்றும் பெட்டியின் நிலை குறித்து ஆய்வு செய்து சேத மதிப்பு கணக்கிடப்பட்டுள்ளது என தெற்கு மத்திய ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.  

வந்தே பாரத் ரயில் திட்டம் செகந்திராபாத் - விசாகப்பட்டிணம் இடையே கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.

மோடி தொடக்கி வைத்து முழுதாக ஒரு மாதம் கூட முடிவடையாத நிலையில், ரயிலின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிப்காட் நவசபரி ஐயப்பன் கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம்

கீரப்பாக்கத்தில் அதிகாரிகள் 9 மணி நேரம் தொடா் ஆய்வு

துலா ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

ஜே.கே. டயா் நிறுவனத்தின் சாா்பில் தொழில் முனைவோருக்கு ரூ. 20 லட்சம் கடனுதவி

தே.ஜ. கூட்டணி வெற்றிக்கு கடுமையாக உழைப்போம்: கூட்டணிக் கட்சித் தலைவா்கள்

SCROLL FOR NEXT