முகப்பு
இந்தியா

மணீஷ் சிசோடியாவுக்கு சிபிஐ மீண்டும் சம்மன்!

தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா நாளை(பிப். 19) நேரில் ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:32 AM
பகிர்:

தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா நாளை(பிப். 19) நேரில் ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. 

தில்லியில் மதுபானக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டதில் மோசடி நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிபிஐ துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் இல்லம் மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணையும் நடைபெற்றது. 3 மாதங்களுக்கு முன்பாக இதுகுறித்து குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து கடந்த ஜனவரி மாதமும் சோதனை நடைபெற்ற நிலையில் தற்போது மணீஷ் சிசோடியாவுக்கு சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. 

தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா நாளை(பிப். 19) தில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளதாகவும் விசாரணைக்கு எப்போதும் ஒத்துழைப்பு கொடுப்பேன் என்றும் மணீஷ் சிசோடியா ட்வீட் செய்துள்ளார்.

மேலும், 'அவர்கள் எனக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறை என முழு அதிகாரத்தையும் பயன்படுத்தினர். என் வீட்டில் சோதனை நடத்தினர். வங்கி லாக்கரை சோதனை செய்தனர். ஆனால், எனக்கு எதிராக எதுவும் கிடைக்கவில்லை. தில்லி குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைக்க ஏற்பாடு செய்துள்ளேன். அவர்கள் இவற்றை எல்லாம் நிறுத்த விரும்புகிறார்கள்' என்றும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →