இந்தியா

ராகுல் காந்தி நடைப்பயணத்தில் உளவுத்துறை முன்னாள் இயக்குநர்!

ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணத்தில் முன்னாள் இந்திய உளவுத் துறை இயக்குநர் அமர்ஜித் சிங் துலாத் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.

DIN

ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணத்தில் முன்னாள் இந்திய உளவுத் துறை இயக்குநர் அமர்ஜித் சிங் துலாத் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்திய ஒற்றுமை நடைப்பயணம்(பாரத் ஜோடோ யாத்ரா) நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பர் 7-ல் தொடங்கிய பயணம் கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைத் தொடர்ந்து தலைநகர் தில்லியை கடந்த டிசம்பர் இறுதியில் அடைந்தது.

புத்தாண்டு ஓய்வுக்கு பிறகு இன்று மீண்டும் தொடங்கிய நடைப்பயணத்தில், இந்திய உளவுத் துறையின் முன்னாள் இயக்குநரும், ‘ரா’ அமைப்பின் முன்னாள் செயலாளருமான அமர்ஜித் சிங் துலாத் கலந்து கொண்டு ராகுல் காந்திக்கு ஆதரவளித்தார்.

இந்த நடைப்பயணமானது உத்தரப் பிரதேச மாநிலம் வழியாக பஞ்சாபை கடந்து காஷ்மீர் சென்றடைகிறது.

கன்னியாகுமரியின் காந்தி மண்டபம் முதல் தில்லியின் செங்கோட்டை வரை 3,122 கி.மீட்டரை நடைப்பயணக் குழுவினர் கடந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT