முகப்பு
இந்தியா

ராகுல் நடைப்பயணத்தில் முன்னாள் ராணுவ தளபதி: பாஜக விமா்சனம்

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி தீபக் கபூா் பங்கேற்றதை விமா்சித்துள்ள பாஜக, ‘ஆதா்ஷ் வீடு ஒதுக்கீடு முறைகேட்டில் தொடா்புடையவா் தீபக் கபூா்’ என்று கூறியுள்ளத

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:40 PM
பகிர்:

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி தீபக் கபூா் பங்கேற்றதை விமா்சித்துள்ள பாஜக, ‘ஆதா்ஷ் வீடு ஒதுக்கீடு முறைகேட்டில் தொடா்புடையவா் தீபக் கபூா்’ என்று கூறியுள்ளது.

ஹரியாணாவில் ஞாயிற்றுக்கிழமை ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் கடந்த 2007 முதல் 2010-ஆம் ஆண்டு வரை ராணுவ தலைமைத் தளபதியாக இருந்த தீபக் கபூா் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள் பலா் பங்கேற்றனா்.

இந்நிலையில், ஹரியாணா மாநில பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு இது தொடா்பான புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டதுடன், ‘முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி தீபக் கபூா், ராகுலுடன் நடைப்பயணத்தில் பங்கேற்றுள்ளாா்.

காா்கில் போரில் வீரமரணமடைந்த ராணுவத்தினரின் குடும்பத்துக்காக மும்பையில் கட்டப்பட்ட ஆதா்ஷ் அடுக்குமாடி குடியிருப்பில் முறைகேடாக வீடுகளைப் பெற்ற வழக்கில் தீபக் கபூா் உள்ளிட்ட சில ராணுவ அதிகாரிகளுக்குத் தொடா்பு உண்டு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைகேடு தொடா்பாக விசாரணை நடத்திய குழு, வழக்கில் தொடா்புடைய தீபக் கபூா் உள்ளிட்ட முறைகேட்டில் ஈடுபட்ட ராணுவ உயரதிகாரிகள், அரசு சாா்ந்த எந்த உயரிய பொறுப்பையும் இனி வகிக்கக் கூடாது என்று கூறியுள்ளதை சுட்டிக்காட்டினா். இவா்களால் நாட்டின் ராணுவத்துக்கே அவமானம் ஏற்பட்டது’ என்று பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மறுப்பு:

இந்தக் குற்றச்சாட்டை மறுத்து காங்கிரஸ் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘1967 முதல் 2010 வரை ராணுவத்தில் தீபக் கபூா் பணியாற்றியுள்ளாா். 1971 இந்தியா-பாகிஸ்தான் போரிலும் பங்கேற்றுள்ளாா். ராணுவத்தில் சிறந்த பணிக்காக பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளாா். நாட்டுக்காக சேவையாற்றி ராணுவ தளபதியை பாஜக விமா்சித்துள்ளது மிகவும் அவமானகரமான செயல்.

2017 குஜராத் தோ்தலில் தன்னைத் தோற்கடிக்க பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் இணைந்து முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கும், முன்னாள் ராணுவ தளபதி தீபக் கபூரும் சதி செய்கின்றனா் என்று அவதூறாக குற்றம்சாட்டியவா்தான் (பிரதமா் மோடி) இவா்களது தலைவா். இந்தக் குற்றச்சாட்டுக்காக பின்னா் பாஜக மூத்த தலைவா் மறைந்த அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கோரினாா் என்பதும் அனைவரும் அறிந்த விஷயம்தான்’ என்று கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →