இந்தியா

வேறுபாடுகள் உள்ள போதிலும் ஒற்றுமையுடன் இந்தியா: மம்தா பானா்ஜி

DIN

ஜாதி, மத வேறுபாடுகள் உள்ளபோதிலும் இந்தியா ஒற்றுமையுடன் உள்ளதாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்துள்ளாா்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஜி20 கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. உலகின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் மம்தா பானா்ஜி பேசுகையில், ‘ஜாதி, மத, மொழி வேறுபாடுகள் உள்ளபோதிலும் இந்தியா ஒற்றுமையுடன் இருந்து வருகிறது.

இதில் மேற்கு வங்கம் புவியியல்ரீதியாக முக்கிய மாநிலமாக திகழ்கிறது. ஏனெனில் இந்தியாவில் உள்ள சில மாநிலங்கள், வங்கதேசம், நேபாளம், பூடான் போன்ற நாடுகளின் நுழைவாயிலாக மேற்கு வங்கம் உள்ளது. மேற்கு வங்க மக்கள் நாடுகளுக்கு இடையே பாகுபாடு காட்டுவதில்லை’ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் ராஷ்மிகா?

சென்னையிலிருந்து சர்வதேச விண்வெளி மையத்தை வெறும் கண்களால் பார்க்கலாம்: நாசா

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: திருவள்ளூர் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம்?

திருச்சியில் 95.23% தேர்ச்சி: மாநில அளவில் 5ம் இடம்!

இலங்கையில் திவ்யபாரதி..!

SCROLL FOR NEXT