தங்கம் வென்ற 83 வயது பாட்டி 
இந்தியா

கேரம் போர்டு போட்டியில் தங்கம் வென்ற 83 வயது பாட்டி: பெருமையுடன் பகிர்ந்த பேரன்

கேரம் போர்டு போட்டியில் தங்கம் வென்ற 83 வயது பாட்டி பற்றி பேரன் பெருமையுடன் பகிர்ந்த டிவிட்டர் பதிவு பலராலும் நெகிழ்ச்சியோடு பகிரப்பட்டு வருகிறது.

DIN


கேரம் போர்டு போட்டியில் தங்கம் வென்ற 83 வயது பாட்டி பற்றி பேரன் பெருமையுடன் பகிர்ந்த டிவிட்டர் பதிவு பலராலும் நெகிழ்ச்சியோடு பகிரப்பட்டு வருகிறது.

தனது பேரன்களுடன் சேர்ந்து 83 வயது பாட்டி கேரம் போர்டு விளையாடும் விடியோவுடன் அந்த பதிவு வெளியாகியிருக்கிறது. அக்ஷன் மாராத்தே என்பவர் பகிர்ந்திருக்கும் அந்த டிவிட்டர் பகுதிவில், 83 வயதாகும் எனது பாட்டி, புனேவில் நடந்த கேரம் போர்டு போட்டியில் இவரை விட இளையவர்கள் மற்றும் உறுதியாக நடுக்கமில்லாத கைகளைக் கொண்டவர்களோடு போட்டியிட்டு இரட்டையர் பிரிவில் தங்கமும், தனி நபர் போட்டியில் வெண்கலமும் வென்று பலருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவருடன் சேர்ந்து பயிற்சி எடுத்துக் கொண்டதற்காக நாங்களும் பெருமை கொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தப் பதவி இரண்டு நாள்களுக்கு முன்பு பதிவிடப்பட்டுள்ளது. இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். பலரும் தங்களது கருத்துகளையும் பகிர்ந்து வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோபோ சங்கர் உடலுக்கு உதயநிதி அஞ்சலி!

அமெரிக்க காவல்துறையால் இந்திய மாணவர் என்கவுன்டர்! நடந்தது என்ன?

‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’: முதல்வரின் ‘எக்ஸ்’தள முகப்பில் புதிய வாசகம்

தமிழக அரசின் தடங்கல்களை விஜய் எதிா்கொள்ளத்தான் வேண்டும்: கே.அண்ணாமலை

பழங்குடியினர் வலி! ராமாயணத்திலிருந்து நவயுகம் வரை... தண்டகாரண்யம் - திரை விமர்சனம்!

SCROLL FOR NEXT