இந்தியா

கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழில் பொங்கல் வாழ்த்து!

DIN


திருவனந்தபுரம்: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கேரள முதல்வர் பினராயி விஜயன் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். 

அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும் உழவுக்கும், நன்றி தெரிவிக்கும் விழாவாக தை மாதம் முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் உயிரோட்டமாகவும், மண் மணத்தோடும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில்,கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்விட்டர் பக்க பதிவில் தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அவர் பதிவிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில், அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள். உழவு செய்து அனைவரையும் வாழவைக்கும் உழவர்கள், செழிப்பையும் அளவற்ற மகிழ்ச்சியையும் பெறவேண்டும். இந்த நன்னாளில் கோடிக்கணக்கான மக்களில் ஒருவராக பங்கேற்று கொண்டாடுகிறோம். பொங்கலோ பொங்கல்! என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT