இந்தியா

17,362 கார்களை திரும்பப் பெற்றது மாருதி சுஸுகி: காரணம்?

DIN


இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, தனது 7 மாடல் கார்களில் 17,362 வாகனங்களை திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.

ஆல்டோ கே10, எஸ்-பிரெஸ்ஸோ, கிராண்ட் விதாரா உள்ளிட்ட ஏழு மாடல் கார்களின் காற்றுப் பைகளில் பழுது இருப்பதாகக் கூறி 17 ஆயிரம் கார்கள் திரும்பப் பெறப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனங்கள் அனைத்தும் 2022ஆம் ஆண்டு டிசம்பர் 8 முதல் 2023ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வரை உற்பத்தி செய்யப்பட்டவை என்றும் கூறப்படுகிறது.

இந்த கார்கள் திரும்பப் பெறப்பட்டு, அவற்றின் காற்றுப்பைகள் பரிசோதனை செய்யப்பட்டு, தேவைப்பட்டால் கட்டணமில்லாமல் மாற்றித் தரப்படுகிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் காவல்துறையினர் சோதனை

அதானிக்கு விமான நிலையங்களை கொடுக்க எத்தனை ‘டெம்போ’ பணம் வாங்கினீர்கள்? ராகுல்

அவதூறு வழக்கு: எழும்பூர் நீதிமன்றத்தில் இபிஎஸ் ஆஜர்!

நாட்டுக்கு அவர் தேவை.. சந்திரபாபு நாயுடு

வாரணாசியில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்!

SCROLL FOR NEXT