இந்தியா

பூஜ்ய டிகிரி செல்சியஸ்: கடும் குளிரில் சிக்கித் தவிக்கும் வடமாநிலங்கள்!

பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் கடும் குளிர் நீடித்து வருவதால், அங்குள்ள மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

PTI

பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் கடும் குளிர் நீடித்து வருவதால், அங்குள்ள மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

வடமாநிலங்களின் பல பகுதிகளில் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் பூஜ்ஜிய டிகிரி வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. 

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

வடமாநிலங்களின் பல பகுதிகளில் வெப்பநிலை வழக்கத்தை விடக் குறைவாகப் பதிவாகியுள்ளது.பஞ்சாபில் உள்ள பதிண்டா மற்றும் ஃபரித்கோட்டில் மைனஸ் 0.2 டிகிரி செல்சியஸ் மற்றும் 0.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. 

அமிர்தசரஸில் 2.9 டிகிரியாகவும், லூதியானாவில் 2.8 டிகிரியாகவும், பாட்டியாலாவில் 2.6 டிகிரியாகவும், பதான்கோட்டில் 3.8 டிகிரியாகவும், குர்தாஸ்பூரில் 2 டிகிரியாகவும், மோகாவில் 0.5 டிகிரியாகவும் மொஹாலியில் 4.2 டிகிரியாகவும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. 

இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகரான சண்டிகரில் 3.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. 

ஹரியானாவில் நர்னால் 0.5 டிகிரியாகவும், சிர்சா 1 டிகிரியாகவும், ஹிசார் 2 டிகிரியாகவும், கர்னாலில் 2.4 டிகிரியாகவும், ரோஹ்தக்கில் 2.8 டிகிரியாகவும், அம்பாலாவில் 4.9 டிகிரியாகவும் வெப்பநிலை பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் ஆகிய மாநிலங்களில் கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக கடும் குளிரின் பிடியில்  சிக்கித் தவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மத்திய அமைச்சர் கலந்துகொண்ட காலநிலை மாநாட்டு அரங்கில் தீ விபத்து! பலர் காயம்!

பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா பயணம்!

வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி ஆய்வு

ஏரியில் மூதாட்டி சடலம்

யூரியா சட்டவிரோதமாக பதுக்கல்: கிட்டங்கிக்கு சீல்

SCROLL FOR NEXT