முகப்பு
இந்தியா

கடும் பனிமூட்டம்: வட மாநிலங்களில் 13 ரயில்கள் இன்று தாமதம்!

கடும் பனிமூட்டம் காரணமாக வடமாநிலங்களில் இன்று 13 ரயில்கள் தாமதம் ஆவதாக ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 

இந்தியா

கடும் பனிமூட்டம்: வட மாநிலங்களில் 13 ரயில்கள் இன்று தாமதம்!

கடும் பனிமூட்டம் காரணமாக வடமாநிலங்களில் இன்று 13 ரயில்கள் தாமதம் ஆவதாக ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 11:47 AM
பகிர்:

கடும் பனிமூட்டம் காரணமாக வடமாநிலங்களில் இன்று 13 ரயில்கள் தாமதம் ஆவதாக ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 

கடந்த சில வாரங்களாகவே தலைநகர் தில்லி மற்றும் அண்டை மாவட்டங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் இந்த பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

தில்லியில் வரலாறு காணாத அளவுக்கு 2 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாக வெப்பநிலை பதிவாகி வருகிறது. 

கடும் பனி நிலவுவதால் வட மாநிலங்களில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மூடுபனி காரணமாக ரயில், விமான சேவை அவ்வப்போது நிறுத்தப்பட்டு தாமதமாகி வருகிறது. 

இந்நிலையில் பனிமூட்டம் காரணமாக இன்று வடக்கு ரயில்வேயில் 13 ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதமாக இயங்கும் ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →