நாட்டில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,940 ஆகக் குறைவு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 131 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 131 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 131 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 4,46,.81,781 கோடியாக உயர்ந்துள்ளது.
Advertisement
கடந்த 24 மணி நேரத்தில் கேரளம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் தலா ஒருவர் கரோனா பாதித்து பலியாகியுள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5,30,730 ஆக உயர்ந்துள்ளது.
அதேநேரத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,940 ஆகக் குறைந்துள்ளது.
தற்போது நாட்டில் குணமடைந்தவர்களின் விகிதம் 98.80 சதவீதமாக உள்ளது.
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தில் இதுவரை 220.19 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது.