இந்தியா

சத்தீஸ்கரில் மரத்தில் கார் மோதி தீப்பிடித்து எரிந்ததில் 3 பேர் பலி

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் மரத்தின் மீது கார் மோதி தீப்பிடித்ததில் 3 பேர் உடல் கருகி பலியாகினர். 

DIN

பிலாஸ்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் மரத்தின் மீது கார் மோதி தீப்பிடித்ததில் 3 பேர் உடல் கருகி பலியாகினர். 

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: 
சனிக்கிழமை இரவு ரத்தன்பூர் மற்றும் பென்ட்ரா சாலைக்கு இடையே உள்ள கைரா-போடி கிராமத்தில் சாலையோரம் இருந்த மரத்தில் மோதியதில் கார் தீப்பிடித்து எரிந்தது. காருக்குள் இருந்தவர்கள் காரில் வெளியே வரமுடியாமல் உடல் கருகி இறந்தனர். 

காருக்குள் இறந்தவர்களின் உடல்கள் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடுகளாக காணப்பட்டதால் இறந்தவர்களை இதுவரை அடையாளம் காணப்படவில்லை. 

விபத்துக்குள்ளான கார் பிலாஸ்பூரில் உள்ள டோர்வா பகுதியைச் சேர்ந்த ஷாநவாஸ் கான் என்பவருக்கு சொந்தமானது தெரியவந்துள்ளது. 

விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்று ரத்தன்பூர்-கோட்டா துணைப் பிரிவு காவல்துறை அதிகாரி ஆஷிஷ் அரோரா  கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

SCROLL FOR NEXT