ஜம்மு-காஷ்மீரில் 2 நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ரஜோரி காவல்துறையினர் தெரிவித்திருப்பதாவது, தஸ்சல் கிராமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்புப் படையினருடன் இணைந்து ஞாயிற்றுக்கிழமை மாலை கூட்டுச் சோதனையில் ஈடுபட்டிருந்தோம்.
அப்போது மேம்படுத்தப்பட்ட 2 நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
பின்னர் அதனை கைப்பற்றி பாதுகாப்பாக அழித்தோம். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து ரஜோரி காவல்துறையினர் வெடிபொருள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க- விருப்பமுள்ளோர் மனு அளிக்கலாம்: அதிமுக
முன்னதாக ஜம்முவின் நா்வால் பகுதியில் உள்ள போக்குவரத்துப் பணிமனையில் சனிக்கிழமை காலை 15 நிமிஷங்கள் இடைவெளியில் இரட்டைக் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அதில் முதல் குண்டுவெடிப்பில் 5 போ் காயமடைந்த நிலையில் இரண்டாம் குண்டுவெடிப்பில் மேலும் 4 போ் காயமடைந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.