கோப்புப் படம் 
இந்தியா

கல்லூரி விடுதியில் மருத்துவ மாணவி தூக்கிட்டு தற்கொலை!

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியில் பெண் மருத்துவ மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

DIN

நெல்லூர்: ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியில் பெண் மருத்துவ மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஸ்ரீகாகுளம் மாவட்டம், பலசா பகுதியை சேர்ந்தவர் சைதன்யா(23). கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணமான சைதன்யா, நெல்லூரில் உள்ள நாராயணா மருத்துவக் கல்லூரியில் ஹவுஸ் சர்ஜனாக பணியாற்றி வந்துள்ளார்.

இன்று காலை கல்லூரி விடுதி அறையில் சைதன்யா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை பார்த்த சக மாணவர்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இவரது மரணம் இயற்கைக்கு மாறானது என்று வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்து வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், சைதன்யாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது தெரியவந்துள்ளது என காவல் துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT