இந்தியா

தில்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு!

தில்லியில் உள்ள டிஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

DIN

தில்லியில் உள்ள டிஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வழக்குரைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் துப்பாக்கியை எடுத்து சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் நீதிமன்ற வளாகத்தில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தில்லி காவல் துறை தெரிவித்துள்ளது.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து தில்லி பார் கவுன்சில் தலைவர் கே.கே. மனன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று மனன் தெரிவித்துள்ளார். 

மேலும், ஆயுதங்களுக்கு உரிமம் உள்ளதா, இல்லையா என்று விசாரிக்கப்படும் என்றும், ஆயுதங்களுக்கு உரிமம் இருந்தாலும் வழக்குரைஞரோ அல்லது வேறு யாரோ, நீதிமன்ற வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயுதங்களை பயன்படுத்த அனுமதியில்லை மனன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

10 கோடி பார்வைகளைப் பெற்ற கனிமா!

லாக்-அப் மரணம் அல்ல! கோவை காவல் நிலையத்தில் ஒருவர் மர்ம மரணம்! நடந்தது என்ன?

தொடர்ந்து 2-ம் நாளாக சரிவில் பங்குச் சந்தை!

மீண்டும் ரூ. 75,000 -ஐ கடந்தது தங்கம் விலை!

75 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT