கோப்புப் படம். 
இந்தியா

மீண்டும் தொடங்கிய அமர்நாத் யாத்திரை!

கனமழை, நிலச்சரிவு காரணமாக கடந்த மூன்று நாள்களாகத் தடைப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரை இன்று காலை மீண்டும் தொடங்கியது. 

DIN

கனமழை, நிலச்சரிவு காரணமாக கடந்த மூன்று நாள்களாகத் தடைப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரை இன்று காலை மீண்டும் தொடங்கியது. 

ஜம்மு-காஷ்மீர், ஸ்ரீநகரின் பாந்தா சௌக் அடிப்படை முகாமில் இருந்து இன்று காலை  பம் பம் போலே, ஹர ஹர மகாதேவ் என்ற கோஷத்துடன் உற்சாகமாக பக்தர்கள் குழு புறப்பட்டுச் சென்றது. 

கடந்த ஜூலை 7-ம் தேதி ஜம்மு-காஷ்மீரில் கனமழையை தொடர்ந்து மோசமான வானிலை நிலவி வந்ததையடுத்து, அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மூன்று நாள்களாக நிறுத்தப்பட்ட யாத்திரை இன்று மீண்டும் தொடங்கியது. 

அமர்நாத் யாத்திரை ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், யாத்திரை தொடங்கி இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குகைக் கோயிலில் உள்ள பனிலிங்கத்தை தரிசித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT