கோப்புப் படம். 
இந்தியா

மீண்டும் தொடங்கிய அமர்நாத் யாத்திரை!

கனமழை, நிலச்சரிவு காரணமாக கடந்த மூன்று நாள்களாகத் தடைப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரை இன்று காலை மீண்டும் தொடங்கியது. 

DIN

கனமழை, நிலச்சரிவு காரணமாக கடந்த மூன்று நாள்களாகத் தடைப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரை இன்று காலை மீண்டும் தொடங்கியது. 

ஜம்மு-காஷ்மீர், ஸ்ரீநகரின் பாந்தா சௌக் அடிப்படை முகாமில் இருந்து இன்று காலை  பம் பம் போலே, ஹர ஹர மகாதேவ் என்ற கோஷத்துடன் உற்சாகமாக பக்தர்கள் குழு புறப்பட்டுச் சென்றது. 

கடந்த ஜூலை 7-ம் தேதி ஜம்மு-காஷ்மீரில் கனமழையை தொடர்ந்து மோசமான வானிலை நிலவி வந்ததையடுத்து, அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மூன்று நாள்களாக நிறுத்தப்பட்ட யாத்திரை இன்று மீண்டும் தொடங்கியது. 

அமர்நாத் யாத்திரை ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், யாத்திரை தொடங்கி இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குகைக் கோயிலில் உள்ள பனிலிங்கத்தை தரிசித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

SCROLL FOR NEXT