முகப்பு
இந்தியா

கன்னியாகுமரி விரைவு ரயிலில் திடீர் புகை!

அசாமிலிருந்து கன்னியாகுமரி புறப்பட்ட திப்ரூகர் - கன்னியாகுமரி விரைவு ரயிலில் திடீரென்று புகை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 11 ஜூலை 2023, 4:53 pm IST
பகிர்:

அசாமிலிருந்து கன்னியாகுமரி புறப்பட்ட திப்ரூகர் - கன்னியாகுமரி விரைவு ரயிலில் திடீரென்று புகை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒடிஸாவின் பிரம்மாபூர் ரயில் நிலையம் அருகே வந்தபோது புகை வந்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். ரயிலின் பிரேக்கில் ஏற்பட்ட பழுது காரணமாக புகை வந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

ரயிலில் இருந்து புகை வந்ததால், ரயிலில் இருந்த பயணிகள் அவசரமாக கீழே இறங்கி ஓடினர். அரைமணி நேரத்துக்கு பின்னர் சூழல் சீரான பிறகு ரயில் மீண்டும் புறப்பட்டு சென்றது.

Advertisement

புகை வந்தவுடன் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு, தீ பிடிக்கமால் தவிர்க்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.