சங்கிலிப் பறிப்பு (கோப்பிலிருந்து..) 
இந்தியா

காவலர்கள் வருவதை எச்சரிக்க சிசிடிவி, 8 உளவாளிகள்: டஃப் கொடுத்த குற்றவாளி

ங்கிலிப் பறிப்பு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு, ஓராண்டுகளுக்கும் மேலாகத் தேடப்பட்டு வந்த குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.

DIN

மும்பை: பல்வேறு சங்கிலிப் பறிப்பு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு, ஓராண்டுகளுக்கும் மேலாகத் தேடப்பட்டு வந்த குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போதுதான் அவர்களுக்கு பல அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் தெரிய வந்தன.

வெறும் சங்கிலிப் பறிப்புச் சம்பவங்களில் ஈடுபடும் சாதாரணக் குற்றவாளியைக் காவல்துறையினரால் ஏன் இத்தனை நாள்கள் கைது செய்ய முடியாமல் போனது என்பதற்கான விடையும் அவர்களுக்குக் கிடைத்துள்ளது.

திருடன் தனது வீடு மற்றும் வீட்டைச் சுற்றிலும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி, காவல்துறையினர் தன்னைத் தேடி வருவதை முன்கூட்டியே அறிந்து, வீட்டிலிருந்து தப்பிவிடுவதும், மாதச் சம்பளம் கொடுத்து, தான் வாழும் பகுதியில் ஏழு உளவாளிகளை நியமித்து, அவர்கள் காவலர்கள் அப்பகுதியை நோட்டமிடுவதை முன்கூட்டியே தெரிவித்துவிடுவதும்தான் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஃபைசல் அலி என்ற அந்த சங்கிலிப் பறிப்புத் திருடன், இதற்காக 8 பெண்களை உளவாளிகளாக நியமித்துள்ளார். அவர்கள் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருடனைத் தேடி காவலர்கள் வந்தபோது, அவர்களை இந்தப் பெண்கள் தாக்கியும் உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஃபைல் அலி கிட்டத்தட்ட 8 ஆண்டுகளில் 56 சங்கிலிப் பறிப்பு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு தேடப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT