முகப்பு
இந்தியா

சந்திராயன் - 3 விஞ்ஞானிகள் திருப்பதியில் தரிசனம்!

சந்திரயான்-3 விண்கலம், சதீஷ் தவண் ஆய்வு மையத்தின் 2-ஆவது ஏவுதளத்திலிருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:02 PM
பகிர்:

சந்திராயன் 3 விண்கலம் வெள்ளிக்கிழமை விண்ணில் ஏவப்படவுள்ள நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று காலை திருப்பதியில் தரிசனம் செய்தனர்.

இஸ்ரோ சாா்பில் ரூ.615 கோடியில் வடிவமைக்கப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலம், சதீஷ் தவண் ஆய்வு மையத்தின் 2-ஆவது ஏவுதளத்திலிருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

இதற்கான ஆயத்த பணிகள் நிறைவடைந்த நிலையில், விண்ணில் செலுத்துவதற்கான 25.30 மணிநேர கவுன்ட் டவுன் வியாழக்கிழமை மதியம் 1 மணிக்கு தொடங்குகிறது.

இந்நிலையில், இன்று அதிகாலை திருப்பதி கோயிலுக்கு சென்ற இஸ்ரோ விஞ்ஞானிகள், சந்திராயன் 3 மாதிரியை வைத்து சிறப்பு தரிசனம் செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →