முகப்பு
இந்தியா

கேரளத்தில் கனமழை: 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

கேரளத்தில் கனமழை பெய்து வருவதால் இன்றும், நாளையும் மிகக் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை அம்மாநில வானிலை ஆய்வுமையம் விடுத்துள்ளது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:02 PM
கோப்புப் படம்
பகிர்:

கேரளத்தில் கனமழை பெய்து வருவதால் இன்றும், நாளையும் மிகக் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை அம்மாநில வானிலை ஆய்வுமையம் விடுத்துள்ளது. 

கேரளத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை தொடர்ந்து வருகிறது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கேரளத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, எர்ணாகுளம், இடுக்கி, கோழிக்கோடு, திரிச்சூர், கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு மிகக் கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. 

ஜூலை 14-ல் இடுக்கி, கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →