இந்தியா

ஜார்க்கண்ட்: நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி 3 பேர் பலி!

ஜார்க்கண்ட் மாநிலம், தன்பாத்தின், பவ்ரா கோலியரி பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிவந்த நிலக்கரி சுரங்கம் சரிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகினர்.

DIN

ஜார்க்கண்ட் மாநிலம், தன்பாத்தின், பவ்ரா கோலியரி பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிவந்த நிலக்கரி சுரங்கம் சரிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகினர்.

இந்த சம்பவம் பவ்ரா கோலியரி பகுதியில் உள்ள பாரத் கோக்கிங் நிலக்கரி சுரங்கத்தில் இன்று காலை 10.30 மணிக்கு நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. 

சுரங்க விபத்தில் 3 பேர் பலியானதாகவும், மேலும் பலர் சிக்கியுள்ளதாகத் துணை காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். 

உள்ளூர் மக்களின் உதவியுடன் 3 பேர் இடிபாடுகளிலிருந்து மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

நிலக்கரி சுரங்க விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக பவ்ரா காவல் நிலைய ஆய்வாளர் தெரிவித்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யாருக்கும் SIM CARD வாங்கித்தராதீங்க! புதிய SCAM ALERT! | Cyber Crime | Cyber Shield

ஈழத்தில் தமிழ்க்குரல்... அஞ்சனா!

தம்மம்பட்டி சிவன் கோவிலில் அன்னாபிஷேக விழா! 5 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு

மம்தானி வெற்றி! நியூயார்க்கில் இருந்து யூதர்கள் வெளியேறுங்கள் - இஸ்ரேல் அமைச்சர் பதிவு!

பெயரே சொல்லும்; கவிதை தேவையில்லை... சைத்ரா!

SCROLL FOR NEXT