முகப்பு
இந்தியா

ஜார்க்கண்ட் சுரங்க சரிவு: விசாரணைக் குழு அமைப்பு!

ஜார்க்கண்டின் தன்பாத் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கிவந்த நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தை விசாரணைக் குழு அமைத்துள்ளதாக தன்பாத் துணை ஆணையர் சந்திப் சிங் கூறியுள்ளார். 

Updated On : 10 ஜூன் 2023, 12:11 pm IST
பகிர்:

ஜார்க்கண்டின் தன்பாத் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கிவந்த நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தை விசாரணைக் குழு அமைத்துள்ளதாக தன்பாத் துணை ஆணையர் சந்திப் சிங் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 

விசாரணைக் குழுவில் துணைப்பிரிவு காவல்துறை அதிகாரி அபிஷேக் குமார், சிந்திரி மற்றும் பர்மேஷ் குஷ்வஹா வட்ட அதிகாரி ஜரியா ஆகியோர் அமைக்கப்பட்டுள்ளனர். 

Advertisement

Advertisement

இந்தக் குழு அடுத்த 24 மணி நேரத்திற்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று அவர் கூறினார். 

ஜூன் 09-ம் தேதி ஜார்க்கண்ட், தன்பாத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாரத் கோக்கிங் நிலக்கரி சுரங்கம் ஒன்று திடீரென சரிந்து விழுந்தது. 

இடிபாடுகளில் சிக்கிய 3 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். சம்பவ இடத்தில் மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்புப் பணியை மேற்கொண்டு வருவதாக போவ்ரா காவல் நிலைய ஆய்வாளர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.