இந்தியா

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில் 78,693 பேர் தேர்ச்சி

DIN

நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று இரவு (ஜூன் 13) 9 மணியளவில் வெளியானது. இதில், தமிழகத்தில் 78,693 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

கடந்த ஆண்டு தமிழகத்தில் 57,250 மாணவர்கள் தேர்ச்சியடைந்திருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மே 7ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை 1.44 லட்சம் மாணவர்கள் எழுதினர். நாடு முழுவதும் 20 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியிருந்தனர்.

தற்போது நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. முதல் 10 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபஞ்சன் என்ற மாணவர் 99.99 சதவிகித மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். 

அதற்கு அடுத்தபடியாக கெளசல் பவுரி 3வது இடத்தையும், சூரியா சித்தார்த் 6வது இடத்தையும் பிடித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும்: விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் மைய முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

விக்கிரவாண்டி தொகுதி இடைத் தோ்தல்: இந்திய ஐக்கிய கம்யூ. போட்டியிட முடிவு

புதுவையில் இளநிலைப் படிப்புகளுக்கு சென்டாக் மூலம் 7,250 போ் விண்ணப்பம்

சாா்பதிவாளா் தாக்கப்பட்ட வழக்கில் 3 போ் கைது

SCROLL FOR NEXT