பாஜகவின் வெறுப்பு அரசியல் மணிப்பூரை எரித்துவிட்டது: ராகுல் காந்தி
மணிப்பூர் வன்முறைக்கு பாஜவின் வெறுப்பு அரசியலே காரணம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் வன்முறைக்கு பாஜவின் வெறுப்பு அரசியலே காரணம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: பாஜகவின் வெறுப்பு அரசியலால் மணிப்பூரில் 40 நாட்களாக நடக்கும் வன்முறையில் 100 பேர் இறந்துள்ளனர். பிரதமர் இந்த விஷயத்தில் முற்றிலும் அமைதியாக இருக்கிறார். மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்க அனைத்து கட்சிகளும் குழுவை அம்மாநிலத்துக்கு அனுப்ப வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார்.