மல்யுத்த சம்மேளனத் தலைவா் பிரிஜ் பூஷண் மீதான மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக நீதிமன்றத்தில் தில்லி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (டபிள்யுஎஃப்ஐ) தலைவா் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் வன்முறை குற்றச்சாட்டு சுமத்திய மல்யுத்த வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதுதொடர்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர், அமித் ஷா ஆகியோரும் மல்யுத்த வீராங்கனைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை
எனினும் ரயில்வே துறையில் தாங்களுக்கு அளிக்கப்பட்ட அலுவல்சாா் பணிகளை நிறைவேற்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பணியில் இணைந்துள்ளனர். பிரஜ் பூஷணை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தில்லி காவல்துறையினர், பிரஜ் பூஷணுக்கு எதிராக தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். பாலியல் புகார் தொடர்பாக பிரிஜ் பூஷணுக்கு எதிராக 25 பேர் வாக்குமூலம் தந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சிறுமி ஒருவர் அளித்த புகாருக்கு ஆதாரங்கள் இல்லை என்பதால் பிரிஜ் பூஷண் மீதான போக்ஸோ வழக்கை கைவிட வேண்டும் என்றும் தில்லி போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதையொட்டி பிரிஜ் பூஷணின் தில்லி இல்லத்திற்கு வெளியே பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.