முகப்பு
இந்தியா

தில்லி பயிற்சி மைய தீ விபத்து: 61 மாணவர்கள் காயம்!

தலைநகர் தில்லியில் முகர்ஜி நகரில் உள்ள பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 61 மாணவர்களுக்கு தீக்காயம் ஏற்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:08 PM
கோப்புப்படம்
பகிர்:

தலைநகர் தில்லியில் முகர்ஜி நகரில் உள்ள பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 61 மாணவர்களுக்கு தீக்காயம் ஏற்பட்டது.

தில்லியில் முகர்ஜி நகரில் உள்ள கட்டடத்தில் 3-வது மாடியில் உள்ள தனியார் போட்டித்தேர்வு பயிற்சி மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

உடனடியாக உள்ளே இருந்த மாணவ, மாணவிகள் மூன்றாவது மாடியில் இருந்து சன்னல் வழியாக கேபிள் வயர் மூலமாக கீழே இறங்கினர். கேபிள் வயர் மூலம் கீழே இறங்கும்போது சில மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது

இந்த தீ விபத்தில் 61 மாணவர்களுடன் வணிக அலுவலங்களில் இருந்த சில ஊழியர்களுக்கும் தீக்காயம் ஏற்பட்டதாகவும், இவ்விபத்தில் பெரிய அளவில் யாருக்கும் பாதிப்பில்லை எனவும், அனைத்து மாணவர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

61 மாணவர்கள் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதில் 50 மாணவர்கள் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் சிகிச்சையில் உள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →