குஜராத்: புயல் பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார் அமித்ஷா
குஜராத்தில் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மத்திய உள்துறை அமைச்சர் ஹெலிகாப்டரில் சென்று அமித்ஷா பார்வையிட்டார்.
குஜராத்தில் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மத்திய உள்துறை அமைச்சர் ஹெலிகாப்டரில் சென்று அமித்ஷா பார்வையிட்டார்.
குஜராத்தின் ஜகாவ் துறைமுகம் அருகே பிபா்ஜாய் புயல் வியாழக்கிழமை இரவில் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியதுடன் பலத்த மழையும் பெய்தது. புயலின் தாக்கத்தால், கட்ச்-செளராஷ்டிரா பகுதியில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் மீட்பு-நிவாரண நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
புயலுக்கு 2 பேர் பலியாகியுள்ளனர், 22 பேர் காயமடைந்துள்ளனர்.
23க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலியாகியுள்ளன. கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமாா் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனா். இந்த நிலையில் குஜராத்தில் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.
கட்ச் மாவட்டத்தில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரையும் அவர் சந்தித்து பேசினார். முன்னதாக மாணட்வியில் உள்ள மாண்ட்வி சிவில் மருத்துவமனையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களையும் கத்தா கிராம மக்களையும் அமித்ஷா சந்தித்தார். அப்போது குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உடனிருந்தார்.