முகப்பு
இந்தியா

ஒடிசாவை குறிவைக்கும் பருவமழை: 5 நாள்களுக்கு கனமழை பெய்யும்!

ஒடிசாவில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மாநிலத்தில் அடுத்த 4-5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. 

Updated On : 22 ஜூன், 2023 at 8:01 PM
பகிர்:

ஒடிசாவில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மாநிலத்தில் அடுத்த 4-5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தென்மேற்கு பருவ மழை ஒடிசா மாநிலத்தின் மால்கங்கிரி, கோராபுட் மற்றும் கஜபதி மாவட்டங்களில் தொடங்கியுள்ளது. அடுத்த இரண்டு நாள்களில் மாநிலத்தின் பல பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கவுள்ளது. அடுத்த 4-5 நாட்களுக்கு மாநிலத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். சில தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி நிற்பதற்கான  வாய்ப்புள்ளது. நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மின்னல் தொடர்பான  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒடிசாவின் பல இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.