தில்லி ரயில் நிலையத்தில் 35 வயதான ஆசிரியை மின்சாரம் தாக்கி பலியானார். உடனிருந்த மகனும் மகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தில்லியில் பருவமழை இன்று தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்றே பலத்த மழை பெய்தது. இந்நிலையில் 35 வயது மதிக்கத்தக்க ஆசிரியை சாக்க்ஷி அஹீஜா என்பவர், உறவினர் வீட்டு விழாவில் பங்கேற்பதற்காக குடும்பத்தினரோடு தில்லி ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.
தேங்கியுள்ள மழைநீரைக் கடக்க முற்பட்டபோது அருகில் இருந்த மின்கம்பத்தை பிடித்துள்ளார். இதனால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சாக்க்ஷி அஹீஜாவை காப்பாற்ற முயன்ற அவரது சகோதரியும் மின்சாரம் தாக்கியதில் காயமடைந்தார். அருகிலிருந்த ஓட்டுநர்கள் சிலர் சாக்க்ஷி அஹீஜாயின் 9 வயது மகன் மற்றும் 7வயது மகளைக் காப்பாற்றினர்.
அலட்சியம் காரணமாக ஏற்பட்ட மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டி.சி.பி அபூர்வ குப்தா தெரிவித்தார்.
அதிக மக்கள் நடமாடும் பகுதியான தில்லி ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.