முகப்பு
இந்தியா

மணிப்பூரில் ஜூலை 8 வரை பள்ளிகளை மூட உத்தரவு

மணிப்பூரில் ஜூலை 8 வரை பள்ளிகளை மூட அம்மாநில கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். 

Updated On : 30 ஜூன், 2023 at 9:31 PM
கோப்புப் படம்.
பகிர்:

மணிப்பூரில் ஜூலை 8 வரை பள்ளிகளை மூட அம்மாநில கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். 

பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனா். இந்தக் கோரிக்கையை, குகி மற்றும் நாகா பழங்குடியினா் எதிா்க்கின்றனா். இவ்விரு சமூகத்தினருக்கும் இடையே கடந்த மே மாத தொடக்கத்தில் பெரும் கலவரம் மூண்டது.

இதில் இதுவரை சுமாா் 120 போ் பலியாகினா். 3,000-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்துள்ளனர். ஏராளமான வீடுகளும் வழிபாட்டுத் தலங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. இதையடுத்து, ராணுவம் மற்றும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையைச் சோ்ந்த 10,000 வீரா்கள் குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

Advertisement

எனினும், வன்முறை சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன. இதனிடையே மணிப்பூர் முதல்வர் ராஜிநாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் மணிப்பூரில் ஜூலை 8 வரை பள்ளிகளை மூட அம்மாநில கல்வித்துறை இயக்குநர் இன்று உத்தரவிட்டுள்ளார்.

மாநிலத்தில் அசாதாரண சூழல் நிலவும் நிலையில் பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதேவேளையில், வன்முறையை கட்டுப்படுத்தும் வகையில் இணையதள சேவைக்கான தடையை ஜூலை 5ஆம் தேதி வரை நீட்டித்தும் மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.