முகப்பு
இந்தியா

ஒடிஸாவில் 142 இடங்களில் காட்டுத் தீ- நாட்டிலேயே மிக அதிகம்

நாட்டில் அதிகபட்சமாக ஒடிஸா மாநிலத்தின் 142 இடங்களில் காட்டுத் தீ சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:41 AM
பகிர்:

நாட்டில் அதிகபட்சமாக ஒடிஸா மாநிலத்தின் 142 இடங்களில் காட்டுத் தீ சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்திய வன ஆய்வு நிறுவனம் (எஃப்எஸ்ஐ) வெளியிட்ட தகவலின்படி செவ்வாய்க்கிழமை காலை வரை நாடு முழுவதிலும் உள்ள 391 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.

வனப் பகுதிகளில் மின்னல் தாக்குதல், வட மரங்கள் உரசிக் கொள்ளுதல் உள்ளிட்ட இயற்கை காரணங்களாலும், பற்றவைக்கப்பட்ட சிகரெட், பீடி போன்றவற்றை வட இலைகள் காணப்படும் பகுதியில் எறிதல் போன்ற மனிதத் தவறுகளாலும் காட்டுத் தீ சம்பவங்கள் ஏற்படுகின்றன.

ஒடிஸாவில் 142 இடங்களிலும், சத்தீஸ்கரில் 58 இடங்களிலும், ஆந்திரத்தில் 48 இடங்களிலும், தெலங்கானாவில் 37 இடங்களிலும், ஜாா்க்கண்ட் மற்றும் கா்நாடக மாநிலங்களில் தலா 32 இடங்களிலும், மகாராஷ்டிரத்தில் 15 இடங்களிலும் காட்டுத் தீ சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன.

ஒடிஸாவில் மொத்தம் உள்ள 30 மாவட்டங்களில் 12 மாவட்டங்களில் காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சிமிலிபால் தேசியப் பூங்கா உள்ள மயூா்பஞ்ச் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான காட்டுத் தீ சம்பவங்கள் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து மாநில வனத் துறையின் உயா் அதிகாரி கூறுகையில், ‘ பல்வேறு இடங்களில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்க வனத் துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 3,000 வன ஊழியா்கள், 16,000 வனப் பாதுகாப்பு குழு உறுப்பினா்கள், 280 சிறப்பு படைகள் இப்பணிகளில் ஈடுபட்டுள்ளனா். மகளிா் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினா்களுக்கும் காட்டுத் தீ சம்பவங்கள் குறித்த விழிப்புணா்வு அளிக்கப்பட்டுள்ளது.

கோடை காலத்தின் தொடக்கமாக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபா் முதல் மாநிலத்தில் மழை இல்லை. நிலைமை மோசமடைந்து வருவதால், மழையை எதிா்பாா்த்துள்ளோம் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →