இந்தியா

பாரமுல்லாவில் பயங்கரவாதிகள் 2 பேர் கைது

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டதில் தடைசெய்யப்பட்ட லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இரண்டு பேரை பாரமுல்லா போலீசார் கைது செய்துள்ளனர். 

DIN

 
பாரமுல்லா:
ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டதில் தடைசெய்யப்பட்ட லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இரண்டு பேரை பாரமுல்லா போலீசார் கைது செய்துள்ளனர். 

இதுகுறித்து பாரமுல்லா போலீசார் தெரிவித்துள்ளதாவது: 
பாரமுல்லா மாவட்டத்தின் குன்ஸர் கிராமப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

அப்போது, தடை செய்யப்பட்ட பயங்கவாத அமைப்பான லஷ்கர்-ஏ-தொய்பாவைச் (டிஆர்எஃப்) சேர்ந்த குர்ஷித் அகமது கான் மற்றும் ரியாஸ் அகமது கான் ஆகியோரை கைது செய்தனர். 

மேலும், அவர்களிடம் இருந்து 2 ஏகே 47 ரக துப்பாகிகள், அதில் பயன்படுத்தப்படும் 15 தோட்டாக்கள்,  20 லஷ்கர் பயங்கரவாத அமைப்பின்  சுவரொட்டிகள் மற்றும் பிற  பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

அவர்களிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், அவர்கள் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-ஏ-தொய்பா (டிஆர்எஃப்) கூட்டாளிகளாக செயல்படுவது தெரியவந்தது. இதுதொடர்பாக அவர்கள் மீது குன்ஸர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என பாரமுல்லா போலீசார் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாடாளுமன்றத்தில் ராஜீவ் காந்தி படத்துக்கு சோனியா, ராகுல் மலர்தூவி மரியாதை!

3-வது நாளாக ஏற்றத்தில் பங்குச் சந்தை!

2வது நாளாக தங்கம் விலை குறைந்தது!

தில்லியில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தே.ஜ. கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்!

SCROLL FOR NEXT