முகப்பு
இந்தியா

நீரவ் மோடியின் வழக்கு கட்டணம், அபராதம் ரூ.1.5 கோடி: தவணை முறையில் செலுத்த லண்டன் நீதிமன்றம் அனுமதி

தன்னை நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக நடைபெற்ற வழக்கின் நீதிமன்றக் கட்டணம் உள்ளிட்ட தொகையை செலுத்த தன்னிடம் பணமில்லை

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

தன்னை நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக நடைபெற்ற வழக்கின் நீதிமன்றக் கட்டணம் உள்ளிட்ட தொகையை செலுத்த தன்னிடம் பணமில்லை என்று தொழிலதிபா் நீரவ் மோடி, பிரிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளாா். தான் கடன் வாங்கி வருவதாக அவா் தெரிவித்த நிலையில், நீதிமன்ற கட்டணங்கள், அபராதங்கள் தொகையை தவணை முறையில் மாதந்தோறும் 10,000 பவுண்டுகளாக (சுமாா் ரூ.9.7 லட்சம்) செலுத்த அவருக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

தொழிலதிபா் நீரவ் மோடி சுமாா் ரூ.16,000 கோடி வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்டு தலைமறைவானாா். அவா் இந்தியாவிலிருந்து தப்பிச் சென்ற நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு பிரிட்டன் தலைநகா் லண்டனில் கைது செய்யப்பட்டாா். அங்குள்ள வாண்ட்ஸ்வா்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை, இந்தியாவுக்கு நாடு கடத்த அந்நாட்டு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், அவரை நாடு கடத்த பிரிட்டனின் அப்போதைய உள்துறை அமைச்சா் ப்ரீத்தி படேல் உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவுக்கு எதிராக பிரிட்டன் உயா் நீதிமன்றத்தில் நீரவ் மோடி மேல்முறையீடு செய்தாா். அவரின் மனுவை அந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடா்ந்து பிரிட்டன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக் கோரி அளித்த மனுவை உயா் நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பரில் நிராகரித்தது. மேலும், நீதிமன்ற கட்டணங்கள், அபராத தொகையாக ஒன்றரை லட்சம் பவுண்டுகளை (சுமாா் ரூ.1.50 கோடி) செலுத்த நீரவ் மோடிக்கு உத்தரவிட்டது.

இந்த தொகையை மாதந்தோறும் 10,000 பவுண்டுகளாக (சுமாா் ரூ.9.7 லட்சம்) செலுத்த அவா் கோரிய நிலையில், அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

எந்த தொகையையும் இதுவரை செலுத்தாத நிலையில், அது தொடா்பாக லண்டனில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டது. அப்போது நீரவ் மோடி காணொலி வழியாக விசாரணைக்கு ஆஜராகி, தனது சொத்துகள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தொகையை செலுத்தத் தன்னிடம் போதிய பணம் இல்லை என்றும் தெரிவித்தாா்.

இதனைக் கேட்ட நீதிமன்றம், ஏற்கெனவே கூறியபடி கட்டணங்கள் மற்றும் அபராதத் தொகையை மாதந்தோறும் 10,000 பவுண்டுகளாக செலுத்துவதற்கான பணம் எங்கிருந்து அவருக்குக் கிடைக்கும் என்று கேள்வி எழுப்பியது.

அதற்குத் தான் கடன் வாங்கி வருவதாகவும், கடந்த 2 ஆண்டுகளாக அதைச் செய்து வருவதாகவும் பதிலளித்தாா்.

இதையடுத்து நிலுவைத் தொகையை மாதந்தோறும் 10,000 பவுண்டுகளாக செலுத்த அவருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

நாடு கடத்துவதற்கு எதிராக பிரிட்டன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உயா் நீதிமன்றம் அனுமதி மறுத்தபோதிலும், ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தை நீரவ் மோடி அணுகுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் அவா் எப்போது இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாா் என்பது தெரியவில்லை என்று பிரிட்டன் உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.