தேஜஸ்வி யாதவுக்கு 2வது முறையாக சம்மன் அனுப்பிய சிபிஐ!
பிகார் நில மோசடி தொடர்பான வழக்கில் லாலுவின் மகன் தேஜஸ்வி யாவுக்கு மத்திய புலனாய்வுத் துறை(சிபிஐ) இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.
பிகார் நில மோசடி தொடர்பான வழக்கில் லாலுவின் மகன் தேஜஸ்வி யாவுக்கு மத்திய புலனாய்வுத் துறை(சிபிஐ) இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.
முன்னதாக தில்லி, பிகார் மாநிலங்களில் 15 இடங்களில் லாலு பிரசாத்தின் உறவினர்களுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில், உறவினர்களின் வீடுகளில் இருந்து ரொக்கம், தங்க நகைகள், தங்கக் கட்டிகள், அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் தேஜஸ்விக்கு இரண்டாவது முறையாக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
முன்னதாக, பிப்ரவரி 24ஆம் தேதி விசாரணைக்கு தேஜஸ்வி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. தற்போது அவருக்கு 2வது முறையாக இன்று பிற்பகல் 2 மணிக்குள் ஆஜராகுமாறு கூறியுள்ளது.
இந்த விவகாரத்தில் பிகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி மற்றும் முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் ஆகியோரிடம் சமீபத்தில் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.