பிரதமர் மோடி அமைச்சர்களுடன் ஆலோசனை
மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனையில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பிரஹலாத் ஜோஷி, நரேந்திர சிங் தோமர், கிரண் ரிஜிஜு, அனுராக் தாகூர், பியூஸ் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நேற்று தொடங்கிய நிலையில், அதானி விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் அவைகள் முடங்கியது.
அதேபோல், பிரிட்டனில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற காங்கிரஸின் ராகுல் காந்தி இந்திய நாடாளுமன்றம் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர்கள் நேற்றைய அவைக் கூட்டத்தில் தெரிவித்தனர்.
இந்த நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர்களுடன் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.