அயோத்தி ராமர் கோயிலின் கருவறை புகைப்படங்கள் கசிந்தன
அயோத்தியில் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், முக்கிய கருவறை புகைப்படங்கள் அண்மையில் வெளியாகியுள்ளன.
அயோத்தியில் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், முக்கிய கருவறை புகைப்படங்கள் அண்மையில் வெளியாகியுள்ளன.
கோயிலின் அறக்கட்டளை உறுப்பினர்களில் ஒரு சிலர், கட்டுமானப் பணியை பார்வையிட்டபோது, கருவறைப் புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமா் கோயிலில் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறும் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சியில் ராமா் சிலை கருவறையில் நிறுவப்படும் என விஸ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்திருந்த நிலையில், கருவறையின் புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றது.
அந்த புகைப்படங்களில், முக்கிய கருவறையின் நுழைவாயில்கள், 20 அடி உயரமுள்ள கருவறை சுவர்களை வடிவமைக்கும் பணிகளும் நடந்து வருவது பதிவாகியிருக்கிறது.
மற்றொரு பக்கம் மக்ரானாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மார்பிள்கள், ராஜஸ்தானின் பன்ஸியிலிருந்து கொண்டுவரப்பட்ட கற்களில் அழகிய வேலைப்பாடுகளும் நடந்து வருகின்றன.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் எதிர்பார்த்ததைவிடவும் விரைவாக நடந்து வருவதால், கருவறையை கட்டி முடிப்பதற்கான அவகாசம் 2023 டிசம்பரிலிருந்து செப்டம்பருக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
கோயிலின் மேற்கோபுரம் கட்டுமானப் பணிகள் இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்கவிருக்கிறது. கோயில் கட்டுமானப் பணிகள் 75 சதவிகிதம் முடிந்துவிட்டது, தற்போது 167 தூண்களை அமைக்கும் பணிகள்தான் நடந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு மத்திக்குள் கட்டுமானப் பணிகளை நிறைவுசெய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விஸ்வ ஹிந்து பரிஷத் பொதுச் செயலா் மிலிந்த் பராண்டே மகாராஷ்டிரத்தின் நாகபுரியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘‘அடுத்த ஆண்டு ஜனவரியில் மகர சங்கராந்திக்குப் பிறகான 15 நாள்களில் அயோத்தி கோயிலில் பிராண பிரதிஷ்டை நடைபெறும்.
கோயில் கருவறையில் ராமா் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன. அந்த நிகழ்ச்சியில் 25 முதல் 40 லட்சம் பக்தா்கள் கலந்துகொள்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது’’ என்றாா்.
கோயில் கருவறையில் ராமா் சிலையைப் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்பாா் என கோயில் கட்டுமானப் பணிகளை மேற்பாா்வையிட்டு வரும் ஸ்ரீராமஜன்ம பூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளையின் நிா்வாகி அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
புகைப்படங்கள்
நன்றி: @ChampatRaiVHP