நாட்டில் புதிதாக 4,282 பேருக்கு கரோனா தொற்று
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,282 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 47,246 ஆக குறைந்துள்ளது
புதுதில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,282 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 47,246 ஆக குறைந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,282 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து இறப்பு எண்ணிக்கை 5,31,547 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.18% ஆக உள்ளது.
Advertisement
Advertisement
தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 4.92% ஆகவும், வாராந்திர தொற்று பாதிப்பு விகிதம் 4% ஆகவும் உள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 6,037 பேர் குணமடைந்துள்ளனர், இதுவரை மொத்தம் 4,43,70,878 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 47,246 ஆக குறைந்துள்ளது.
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.66 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது. இதில் 95.21 கோடி இரண்டாம் தவணை தடுப்பூசி டோஸ்களும், 22.87 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்களும் போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 172 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 87,038 பேரிடம் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 92.67,60,898 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.