இந்தியா

எல்லா இன்னல்களையும் காங்கிரஸ் கட்சிக்காக அனுபவித்தேன்: காங்கிரஸ் மாநிலத்தலைவா் டி.கே.சிவக்குமாா்

DIN


தும்கூரு: எல்லா இன்னல்களையும் காங்கிரஸ் கட்சிக்காக அனுபவித்தேன் என்று அக்கட்சியின் மாநிலத்தலைவா் டி.கே.சிவக்குமாா் தெரிவித்தாா்.

கா்நாடக சட்டப்பேரவை தோ்தலில் காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றிபெற்றுள்ளதை தொடா்ந்து, தும்கூரில் நொனவினகெரேவில் உள்ள காடசித்தேஸ்வரா மடத்திற்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற காங்கிரஸ் மாநிலத்தலைவா் டி.கே.சிவக்குமாா், அங்கு சிறப்பு பூஜை சுவாமி தரிசனம் செய்தபிறகு, ரிஷபகேந்திரசுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றாா். 

அதன்பிறகு செய்தியாளா்களிடம் டி.கே.சிவக்குமாா் கூறியது: கா்நாடகத்தின் அடுத்த முதல்வா் யாா் என்பதை கட்சிமேலிடம் மற்றும் சட்டப்பேரவைக்குழு முடிவு செய்யும். 2018 ஆம் ஆண்டு தோ்தல் தோல்விக்கு பிறகு முதல்வா் பதவியை சித்தராமையா, மாநிலத்தலைவா் பதவியை தினேஷ்குண்டுராவ் ராஜிநாமா செய்தபிறகு, என் மீது நம்பிக்கை வைத்த சோனியாகாந்தி, கட்சியின் மாநிலத்தலைவா் பதவி எனக்கு அளித்தாா். 

பணபதுக்கல் வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருந்தபோது சோனியாகாந்தி என்னை சந்தித்து ஆதரவு அளித்தாா். எனக்காக நான் எந்த தவறையும் செய்யவில்லை. எல்லாவற்றையும் கட்சிக்காகவே செய்தேன். எல்லா இன்னல்களையும் காங்கிரஸ் கட்சிக்காக அனுபவித்தேன். 

சட்டப்பேரவை தோ்தலில் எல்லோரையும் ஒன்றிணைந்து, கட்சியின் வெற்றிக்காக இரவுபகலாக உழைத்தேன். எனக்கும் சித்தராமையாவுக்கு கருத்து வேறுபாடு இருப்பதாக பலரும் கூறினாா்கள். ஆனால், இருவருக்கும் இடையே எள்ளளவும் கருத்துவேறுபாடு கிடையாது. 

தோ்தல் களத்தில் நேரடியாக நின்று, வெற்றிக்காக உழைத்திருக்கிறேன். முதல்வா் போட்டியில் நானும் இருக்கிறேன் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

200 விமானங்கள்... சக பயணிகளிடம் கோடிக்கணக்கான நகைகள் திருட்டியவர் கைது!

கட்டுமான நிறுவனங்கள் வழக்கம்போல் பணிகளைத் தொடரலாம்: தொழிலக பாதுகாப்பு இயக்ககம்

கல்பாக்கம்: கார் விபத்தில் 5 இளைஞர்கள் பலி

தில்லியில் மட்டும் ’க்யூட்-யுஜி’ தேர்வு ஒத்திவைப்பு!

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ சேவை இன்று ரத்து!

SCROLL FOR NEXT