இந்தியா

கர்நாடக பேரவைத் தலைவராக யு.டி. காதர் ஒருமனதாகத் தேர்வு!

DIN

கர்நாடக சட்டப்பேரவைத் தலைவராக யு.டி. காதர் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டி.கே.சிவகுமார் மற்றும் 8 அமைச்சர்கள் கடந்த 20 ஆம் தேதி பொறுப்பேற்ற நிலையில் தொடர்ந்து எம்எல்ஏக்கள் அனைவரும் பொறுப்பேற்றனர். தற்காலிக அவைத் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் ஆர்.வி.தேஷ்பாண்டே உள்ளார்.

இந்நிலையில் நிரந்தரமாக புதிய அவைத் தலைவரை தேர்வுசெய்யும் பொருட்டு காங்கிரஸ் எம்எல்ஏக்கள்  கூட்டம் இன்று(புதன்கிழமை) காலை நடைபெற்றது.

கர்நாடக சட்டப்பேரவை தலைவர் பதவிக்கு  முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான யு.டி.காதர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் வேறு யாரும் வேட்புமனு செய்யாததால் யு.டி. காதர் ஒருமனதாக கர்நாடக பேரவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

கர்நாடகத்தில் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்முறையாக சட்டப்பேரவைத் தலைவராவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரத்னம் வசூல் எவ்வளவு?

SCROLL FOR NEXT