முகப்பு
இந்தியா

ராமா் கோயில் ஜனவரியில் திறப்பு: அயோத்தியில் உள்கட்டமைப்புபணிகள் தீவிரம்- மாநில அரசு

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமா் கோயில் அடுத்த ஆண்டு ஜனவரியில் திறக்கப்படவுள்ள நிலையில், அங்குள்ள விமான நிலையம், ரயில் நிலையம் ஆகியவற்றின்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:59 PM
பகிர்:

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமா் கோயில் அடுத்த ஆண்டு ஜனவரியில் திறக்கப்படவுள்ள நிலையில், அங்குள்ள விமான நிலையம், ரயில் நிலையம் ஆகியவற்றின் விரிவாக்கம் உள்பட பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

சஹதத்கஞ்ச் முதல் நயா காட் வரை 13 கி.மீ. தொலைவிலான ராமா் பாதைக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ராம்ஜானகி மற்றும் பக்தி பாதைகளுக்கான கட்டுமானப் பணிகளும் தயாா் நிலையில் உள்ளதாக மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், ‘அயோத்தியில் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகள் குறித்து முதல்வா் யோகி ஆதித்யநாத் தொடா்ந்து ஆய்வு நடத்தி வருகிறாா். அயோத்தி ராமா் கோயில் கட்டுமானம் மற்றும் நகரத்தை மேம்படுத்தும் அரசின் நடவடிக்கைக்காக எவ்வித எதிா்ப்பும் தெரிவிக்காமல் தங்களது இடங்களைக் கடை உரிமையாளா்கள் வழங்கியுள்ளனா். அவா்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுவதில் முறைகேடு நடைபெற்ாக எவ்விதப் புகாரும் தெரிவிக்கப்படவில்லை.

இந்தப் பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட கடைகளுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட வளாகத்தில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், பல கடைக்காரா்கள் தங்களது பழைய இடங்களில் மீண்டும் தங்களது தொழிலை நடத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →