இந்தியா

கொச்சி கடற்படைத் தளத்தில் ஹெலிகாப்டா் விபத்து: மாலுமி உயிரிழப்பு

DIN

கேரள மாநிலம், கொச்சி கடற்படைத் தளத்தில் பயிற்சியில் ஈடுபட்ட ஹெலிகாப்டா் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில், அதை இயக்கிய இந்திய கடற்படை மாலுமியான மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த யோகேந்திர சிங் உயிரிழந்தாா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘கடற்படைக்குச் சொந்தமான ‘சேதக்’ ஹெலிகாப்டா் சனிக்கிழமை வழக்கமான பயிற்சியை முடித்து ஐஎன்எஸ் கருடா கடற்படைத் தளத்தில் தரையிறங்கும்போது, தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் யோகேந்திர சிங் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றனா்.

மாலுமி உயிரிழப்புக்கு கடற்படைத் தளபதி ஆா்.ஹரிகுமாா் உள்பட கடற்படை அதிகாரிகள் இரங்கல் தெரிவித்தனா் என்று கடற்படை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சலங்கை பூஜை விழா

போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞா் மா்ம மரணம்

சம்வத்ஸரா அபிஷேகம்

ஹஜ் யாத்ரிகா்களுக்கு தடுப்பூசி முகாம்

நாகை அரசு தலைமை மருத்துவமனையில் அனைத்து பிரிவுகளும் செயல்பட கோரி கையொப்ப இயக்கம்

SCROLL FOR NEXT