இந்தியா

கேஜரிவால் மனைவிக்கு அனுப்பப்பட்ட சம்மனுக்குத் தடை!

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் மனைவிக்கு அனுப்பப்பட்ட சம்மனுக்கு தில்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

DIN

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் மனைவிக்கு அனுப்பப்பட்ட சம்மனுக்கு தில்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் மனைவி சுனிதா கேஜரிவால், தில்லியின் சந்தனி தொகுதி மற்றும் உத்தர பிரதேசத்தில் ஷஹீதாபாத் தொகுதி என இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பதாக பாஜகவின் ஹரிஷ் குரானா வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கில் சுனிதா கேஜரிவால் நவ. 18 ஆம் தேதி ஆஜராக வேண்டுமென  தில்லி பெருநகர குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கின் விசாரணை இன்று தில்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி அமித் பன்சால் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. 

அப்போது, வருகிற 2024 பிப்ரவரி 1 ஆம் தேதி வரை சுனிதா கேஜரிவாலுக்கு அனுப்பப்பட்ட சம்மனுக்குத் தடை விதிப்பதாக நீதிபதி உத்தரவிட்டு வழக்கை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT