இந்தியா

தில்லியில் வெளிமாநில டாக்ஸிகள் நுழையத் தடை!

DIN


காற்று மாசுபாடு காரணமாக தில்லி நகரத்துக்குள் வெளிமாநில வாடகைக் கார்கள் நுழைவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

அதன்படி மற்ற மாநில பதிவெண்கள் கொண்ட வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், டெல்லி பதிவெண் கொண்ட வாகனங்கள் மட்டுமே நகருக்குள் செல்ல அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் காற்று மாசுபாடு மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. இதனால், நவம்பர் 18 வரை தில்லி அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தில்லி காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையில் மரங்கள், மற்றும் சாலையோரம் லாரிகளில் வாகனங்களின் உதவியுடன் தண்ணீர் தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆப்கள் மூலமாக சேவை வழங்கும் டாக்ஸிகளுக்கு டெல்லி அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

அதேபோல மாசு மேலும் அதிகரிக்காமல் இருக்க பிஎஸ் 3 மற்றும் பிஎஸ் 4 வாகனங்கள் தில்லிக்குள் இயக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சிஎன்ஜி எனப்படும் கேஸ் மூலமாக இயங்கும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுவையில் நீட் அல்லாத படிப்புகளுக்கு ஜூன் 5-இல் தரவரிசைப் பட்டியல்

வெளிநாட்டிலிருந்து வந்தவா் கைது

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் பள்ளம்: சீரமைப்பு பணியை தடுத்து நிறுத்திய முன்னாள் மத்திய அமைச்சா்

பள்ளிப் பேருந்துகளை இயக்கி பாா்த்து ஆய்வு செய்த ஆட்சியா்

ஆலங்குளம்: மல்லிகைப்பூ விலை வீழ்ச்சி

SCROLL FOR NEXT