காற்று மாசுபாடு காரணமாக தில்லி நகரத்துக்குள் வெளிமாநில வாடகைக் கார்கள் நுழைவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி மற்ற மாநில பதிவெண்கள் கொண்ட வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், டெல்லி பதிவெண் கொண்ட வாகனங்கள் மட்டுமே நகருக்குள் செல்ல அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் காற்று மாசுபாடு மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. இதனால், நவம்பர் 18 வரை தில்லி அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தில்லி காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையில் மரங்கள், மற்றும் சாலையோரம் லாரிகளில் வாகனங்களின் உதவியுடன் தண்ணீர் தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆப்கள் மூலமாக சேவை வழங்கும் டாக்ஸிகளுக்கு டெல்லி அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதேபோல மாசு மேலும் அதிகரிக்காமல் இருக்க பிஎஸ் 3 மற்றும் பிஎஸ் 4 வாகனங்கள் தில்லிக்குள் இயக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சிஎன்ஜி எனப்படும் கேஸ் மூலமாக இயங்கும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.