அரபிக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி!
அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவியது. இதனால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது.
இதையும் படிக்க | இன்றும், நாளையும் 11 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
இந்த நிலையில், மத்திய கிழக்கு அரபிக் கடலில் நிலவிய கீழடுக்கு சுழற்சியானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இன்று உருவாகியுள்ளது.
இதனால், கேரளம், தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.