இந்தியா

ராஜஸ்தான் சிறுமி பாலியல் வன்கொடுமை: பாஜக தலைவர்கள் கண்டனம்!

ராஜஸ்தானில் காவல் உதவி ஆய்வாளரால் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

DIN

ராஜஸ்தான் சிறுமி காவல் உதவி ஆய்வாளரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ராஜஸ்தானின் தௌஸா மாவட்டத்தில் உள்ள ரகுவாஸ் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த பூபேந்திர சிங் அப்பகுதியைச் சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு ராஜஸ்தான் பாஜக தலைவர் சி.பி.ஜோஷி, கிரோடிலால் மீனா, தியா குமாரி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து பேசிய ராஜஸ்தான் பாஜக மாநிலத் தலைவர் சி.பி.ஜோஷி, “தௌஸா சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கண்டனத்திற்குரியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ஐந்தாண்டுகளாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற சம்பவங்களில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறுவதால்தான் குற்றவாளிகள் தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.” என்று தெரிவித்தார். 

இதுகுறித்து கிரோடிலால் மீனா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “காவல் உதவி ஆய்வாளரால் 7 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அசோக் கெலாட் தலைமையிலான காவல்துறை கையாலாகாததாக உள்ளது.” என்று கூறியுள்ளார். 

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த பாஜகவைச் சேர்ந்த தியா குமாரி, “சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அவமானகரமானது. அசோக் கெலாட் அரசு இந்த விவகாரத்தில் மௌனமாக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை அரசாங்கம் உறுதி செய்யவேண்டும்.” என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் முதல் கட்டத் தேர்தல்! இன்றுடன் பிரசாரம் ஓய்வு!

கோவை சம்பவம்: தடவியல் நிபுணர்கள் சோதனை! நடந்தது என்ன?

இளையான்குடி அருகே இருதரப்பினா் இடையே மோதல்-கல்வீச்சு: 5 போ் காயம்

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

கோவை சுட்டுப் பிடிப்பு சம்பவம்: காவலருக்கு அரிவாள் வெட்டு!

SCROLL FOR NEXT