இந்தியா

கேரள சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை!

DIN

கேரள சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

எா்ணாகுளம் மாவட்டத்தின் ஆலுவாவைச் சோ்ந்த 5 வயது சிறுமி, ஜூலை 28ல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டாள். பெற்றோருடன் அந்தச் சிறுமி வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பிகாா் மாநில புலம்பெயா் தொழிலாளி ஆஷ்ஃபாக் ஆலம் என்பவரை போலீஸாா் கைதுசெய்தனா். விசாரணையில் குற்றமிழைத்ததை அவா் ஒப்புக் கொண்டாா்.

இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட ஆலமின் குற்றப் பின்புலத்தைத் திரட்டும் முயற்சியில் போக்ஸோ வழக்கின்கீழ் ஆலம் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டு அவா் ஜாமீனில் விடுதலையாகியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து இது தொடர்பான வழக்கு எர்ணாகுளம் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில், ஆலம் மீதான குற்றங்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்ட நிலையில், கடந்த நவம்பர் 4 ஆம் தேதி அவரை குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

தொடர்ந்து தண்டனை விவரங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்பட்டன. அதன்படி குற்றவாளி ஆலமுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சம்பவம் நடந்து 109 நாள்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நான் ஒருபோதும் இந்து, முஸ்லிம் என பேசுவதில்லை: பிரதமர் மோடி

3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை!

3 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை: ஆட்சியர்களுக்கு உத்தரவு!

முதல் காலாண்டில் சாம்சங்கின் பங்குகள் 13% சரிவு, ஐபோன் 19% உயர்வு!

ராஜஸ்தான்: சுரங்க விபத்தில் சிக்கிய 14 பேர் மீட்பு; ஒருவர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT