இயற்கை பராமரிப்பில் உள்ளூர் மக்கள் பங்கு முக்கியமானது : சுப்ரியா சாஹு
கல்விச் சிந்தனை அரங்கில் சுப்ரியா சாஹு பேசியது குறித்து...
இயற்கையை பராமரிப்பதில் உள்ளூர் மக்களின் பங்கு மிகவும் முக்கியமானது என தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு தெரிவித்தார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் இரு நாள்கள் (மார்ச் 2, 3) நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கு 2026-ல் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு கலந்துகொண்டார்.
இதில், பூமியை வென்றெடுத்தல் : எதிர்காலத்தைக் காப்பாற்றுதல் என்ற தலைப்பில் சுப்ரியா சாஹு கலந்துகொண்டு பேசியதாவது:
Advertisement
Advertisement
''எந்தவொரு வளர்ச்சியின் அடிப்படையும் மேம்படும் நிலைத்தன்மையில் வேரூன்றியிருக்க வேண்டும்.
நீங்கள் உண்மையிலேயே ஒரு சக்திவாய்ந்த நாடாக இருக்க விரும்பினால், சக்தி வாய்ந்த டிரில்லியன் பொருளாதார நாடாக இருக்க விரும்பினால், பல்லுயிர் பெருக்கம் மற்றும் காலநிலை மாற்றத்தில் வலுவான அடிப்படைகளைக் கொண்டிருக்க வேண்டும்.
உள்ளூர் மக்களின் மனநிலையை என் ஆராய்ச்சிக் குழுவினர் துல்லியமாகக் கண்டறியும் திறமை உடையவர்கள். மாங்குரோவ் காடுகளின் பராமரிப்பில் உள்ளூர் மக்களின் கருத்துகள், ஆலோசனைகள் மிகவும் முக்கியமானது.
மீன்களின் எலும்புகளைப் போன்று மாங்குரோவ் காடுகளின் தன்மை உள்ளது. இது இயற்கையின் அதிசயம். உள்ளூர் மக்களின் உள்ளீடுகளை மாங்குரோவ் காடுகளில் தமிழக வனத் துறை செயல்படுத்தியுள்ளது. இது குறிப்பிடத்தகுந்த வெற்றியையும் அளித்துள்ளது'' எனப் பேசினார்.
ThinkEdu Conclave 2026 Supriya Sahu Additional Chief Secretary
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.