இந்தியா

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் தேர்தல் பிரசாரம் நிறைவு!

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று(புதன்கிழமை) மாலையுடன் நிறைவு பெற்றது.

DIN

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று(புதன்கிழமை) மாலையுடன் நிறைவு பெற்றது. 

சத்தீஸ்கர் மாநிலத்தில் 20 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த நவ. 7 ஆம் தேதி முதற்கட்டத் தேர்தல் நடைபெற்ற நிலையில் மீதியுள்ள 70 தொகுதிகளுக்கு வருகிற நவ. 17 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 

அதேபோல, 230 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேசத்திலும் நவ. 17 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 

சத்தீஸ்கரில் பிரியங்கா காந்தி...

தேர்தல் ஆணைய விதிகளின்படி, இந்த இரு மாநிலங்களிலும் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெற்றது.

கடந்த சில தினங்களாக இந்த இரு மாநிலங்களிலும் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

சத்தீஸ்கரில் அமைச்சர் அனுராக் தாக்கூர்

ஏற்கெனவே மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த நவ. 7ல் ஒரே கட்டமாக நடைபெற்றது. 

ஐந்து மாநிலத் தேர்தலில் ராஜஸ்தானில் வருகிற நவ. 25 ஆம் தேதியும் தெலங்கானாவில் நவ. 30 ஆம் தேதியும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற  உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலவச மனைப் பட்டா கேட்டு புதுச்சேரி ஆட்சியரிடம் கம்யூ. மனு

விவசாயிகளுக்கு ஸ்மாா்ட் அடையாள அட்டை

ராஜ்பவன் தொகுதியில் ரூ.16 கோடியில் குடிநீா் குழாய்கள் பதிக்கும் திட்டப் பணி: முதல்வா் என். ரங்கசாமி தொடங்கி வைத்தாா்

சென்னை ஒன் செயலியில் ரூ.1000, ரூ.2000-க்கான பயண அட்டை: அமைச்சா் சா.சி.சிவசங்கா் தொடங்கி வைத்தாா்

பெரும்பாலான கூட்டுறவு நிறுவனங்கள் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டவை: எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா

SCROLL FOR NEXT