இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொலை!

DIN

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 5 பேரை பாதுகாப்புப் படையினா் இன்று(வெள்ளிக்கிழமை) சுட்டுக் கொன்றனா்.

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டையொட்டிய பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருந்ததாகத் தகவல் வெளியானதையடுத்து பாதுகாப்புப் படைகள் இன்று(வெள்ளிக்கிழமை) காலை ரோந்து பணியில் ஈடுபட்டன. 

அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.

இந்த மோதலில்  லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 5 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

குல்காம் காவல்துறை, ராணுவம் மற்றும் பாதுகாப்புப்படையினரால் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அவா்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் என்று மூத்த காவல் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சல்மான் கான் படத்தில் ராஷ்மிகா!

ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க அனுமதி

நாளை அயோத்திக்குச் செல்கிறார் குடியரசுத் துணைத் தலைவர் தன்கர்!

ஆஸி.க்கு ஆடுவதுபோலவே இங்கும் அதிரடியாக ஆடுகிறேன்: ஆட்ட நாயகன் டிராவிஸ் ஹெட்!

ஆந்திரத்தில் ரூ.8 கோடி பறிமுதல், 2 பேர் கைது

SCROLL FOR NEXT