இந்தியா

தொழிலதிபர் அமித் அரோராவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது தில்லி உயர்நீதிமன்றம்

DIN

தொழிலதிபர் அமித் அரோராவின் இடைக்கால ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து தில்லி உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. 

தில்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு மற்றும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தொழிலதிபர் அமித் அரோரா தனது மகளின் உடல்நிலையை காரணம் காட்டி இடைக்கால் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா இந்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

அமித் அரோராவின் சார்பில் மூத்த வழக்கறிஞர் விகாஷ் பாஹ்வா மற்றும் பிரபவ் ரல்லி ஆகியோர் ஆஜராகினர். அமித் அரோராவின் மகளுக்கு உடல்நிலை சரியில்லை. அவர் மகளுக்கு பெற்றோரின் கவனிப்பு அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

அவரின் மகளுக்கு டிசம்.2-ஆம் தேதி தேர்வு உள்ளது. அவரால் அதற்கும் தயாராக முடியவில்லை. மேலும் அரோராவுக்கும் உடல்நிலை சரியில்லை. அவர் 2022 ஆம் ஆண்டு நவம்பர் 29-ஆம் தேதி முதல் தற்போது வரை சிறையில் இருந்து வருகிறார். எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று விகாஷ் பாஹ்வா வாதாடினார்.

அமலாக்கத் துறை இந்த ஜாமீன் மனுவை எதிர்த்து வாதாடியது. மருத்துவ ஆவணங்களின்படி அவரின் மகளுக்கு குடும்பத்தினரின் கவனிப்பு அவசியம் என்றாலும், அமித் அரோராவை தவிர அவரது வீட்டில் மற்ற குடும்ப உறுப்பினர்களும் உள்ளனர். எனவே மகளை கவனித்துக் கொள்ள அமித் அரோராதான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று கூறி ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து அவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்த் சர்மா உத்தரவிட்டார். இதே மதுபான ஊழல் வழக்கில் தில்லி முன்னாள் முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் எம்.பி. சஞ்சய் ஆகியோரும் சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT